
ரெம்பக்காலமாகவே பெண்களுக்கு உற்சாகமூட்டும் சிறு சிறு உண்மை
சம்பவங்களை பதிவு செய்ய ஆசை.என் நேரம் ஒத்துழைத்ததால் இன்று வந்திருக்கிறேன்.
வழக்கம் போல வெளியே போயிருந்தோம்.பார்க்கிங்க் இல் என் கணவர் யாரோ தெரிந்த பையனை கண்டு பேசினார் .
என் கணவர் : போன வாரம் ட்ரைவிங் எக்ஸாம் க்கு போனியே லைசன்ஸ் எடுத்துவிட்டாயா???
அந்த பையன் :போய் பெயிலாகீட்டேண்ணா
என் ஹஸ் : யார் இன்ஸ்பெக்டர் ??? எத்தனை பேர் எக்ஸாம் செய்தனீங்கள்.
பையன். மொத்தம் ஆறுபேர் 4 ஆண்கள் 2 பெண்கள் எல்லாருமே வேறு வேறு நாட்டவர்கள் .5 பேர் ஃபெயில் ஒரு தமிழ் அக்கா வந்தவா அவா மட்டும்தான் பாஸ்
என் ஹஸ்: ம்ம் நம்மட தமிழ் பொண்ணுங்கள் ஃபெயில் பண்றது குறைவுதான் ரெம்ப பேவக்ட் ட்ரைவிங்டா ? இட்ஸ் ஓக்கே நீ சட்டெண்டு அடுத்த தடவை போய் எடுத்துடு .
முற்றும்
இப்போ இவர்கள் பேசிக்கொண்டது வெறும் கார் லைசன்ஸ் என்று நீங்கள் நினைத்தால் தவறு .அதெல்லாம் நம் தமிழ் பெண்களுக்கு ஜிஜுப்பி. நம் பெண்கள் விரும்பி எடுக்கும் லைசன்ஸ் az license எனப்படும்
இந்த படத்தில் இருக்கும் ட்ரக் ற்கு உரியது.அயல் நாடுகளுக்கு போய் வரலாம் வாரத்திற்கு 2 தடவை வேலைசெய்தால் கூட ஒரு டாக்டர் சம்பாதிக்கும் அளவு சம்பாதிக்கலாம் .மீதி நாட்கள் குடும்பத்துடன் செலவு செய்யலாம்.
அடுத்து ஸ்கூல் பஸ் ஓட்டுவது . பார்ட் டைம் ஜொப்.இப்படி நிறைய ஆண்கள் செய்யும் வேலைகள் .நம் பெண்கள் செய்வது மட்டுமன்றி கண்டபடி தவறிழைக்காதவர்கள் என்ற நல்ல பெயரும் எடுத்து வைத்திருக்கிறார்கள்.
நாடு கடந்தும் அரசியல் , போலீஸ் என்று எதிலும் இருக்கிறார்கள்.
இந்த முன்னேற்றத்திற்கு இடம்கொடுத்தது இந்த நாடும் ,இந்த நாடு பெண்களுக்கு கொடுக்கும் மரியாதையும்தான் என்று நீங்கள் நினைத்தால் தவறு.
இங்கும் பெண்கள்மீதான அனைத்து அத்துமீறல்களும் இருக்கவே செய்கிறது.
இதே போன்ற அதீத முன்னேற்றங்களை போர்க்கால சூழ்நிலைகளிலும் நம் ஏழை நாட்டிலும் பார்த்தே வழர்ந்திருக்கிறேன்.
ஏன் அமெரிக்கா மாப்பிளை மாப்பிளை என்பார்கள் .ஆனால் அமெரிக்காவில் உயர்பதவிகளில் திறமையாக செயல்படுவதில் இந்தியப்பெண்களே அதிகமாக இருக்கிறார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

குடும்ப வாழ்க்கை என்று வந்து விட்டால் நம் தமிழ் பெண்களுக்கு எங்கிருந்தாலும் பொறுப்புக்களும் வாழ்வியல் முறைகளும் ஒன்றுதான்.சில நலன்கள் இருந்தாலும் இடையூறுகளும் அதிகம்தான் .
குழந்தைகள் பராமரிப்பில் எந்த உதவியும் கிடையாது.உடம்பு முடியாவிட்டாலும் வேலைக்காரி என்ற பேச்சுக்கு இடமில்லை.பணக்கஷ்டம் நிறையவே வந்து போகும்.
அப்படி உதவிக்கு யாரும் இருந்தாலும் அது பெற்றோராகவே இருப்பினும் சிரமம் கொடுக்காமல் பிரசவத்திற்கும் உதவி பெறாமல் சமாளிக்கும் மன உடல் தைரியம் மிக்கவர்களாகவே இருக்கிறார்கள்.
ஊரில் நிறைய படித்திருப்பார்கள் .ஆனால் அந்த யூனிவேர்சிட்டியில் படித்தேன் ,இந்த யூனிவேர்சிட்டியில் பி எச் டி முடித்தேன் ,மன்னார் குடியில் கேட்டாக ,மாயவரத்திலும் கேட்டாக என்றும்
நான் படித்தேன் படித்தேன் .என் பாட்டி படித்தார் ,தாத்தா படித்தார் ,எஞ்சினியரிங்க் முடித்தேன் என்றெல்லாம் ஃபேஸ்புக் ல் ஸ்டேட்டஸ் ல் தங்களை நிலைநாட்டிவிட்டு
ஆணியும் அசைக்காமல் பழைய புராணத்தையே சொல்லிக்கொண்டு இருக்க மாட்டார்கள் .
எந்த சலனமும் இல்லாமல் கோப்பிக்கடைக்கு வேலைக்கு போவார்கள் .கடின உழைப்பாலும் நேரம் தவறாமையாலும் சிறிது காலத்திலேயே மனேஜர் பதவியை அடைகிறார்கள் மிகச்சில வருடங்களிலேயே அந்த கோப்பிக்கடையை
தாமே எடுத்து நடத்த தொடங்கி விடுகிறார்கள் அல்லது தனி பிஸ்னஸ் ஆரம்பித்து விடுகிறார்கள்.
இங்குள்ள நிறைய தமிழ் தொழிலதிபர்கள் பெண்கள்தான் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்.

ஆகவே பெண்கள் அங்கீகாரம் வேண்டும் நாங்களும் ஆதிக்கம் செலுத்துவோம் என்று நினைத்தால் தகர்க்க வேண்டிய முதல்படி பொருளாதார சார்பு.
யாரும் நம்மை விலங்கிட்டு கட்டி இழுத்து வழிநடத்தவில்லை.
நம்பெற்றோர் ,நம் கணவன்,நம் சமூகம்தான் நம்மைச்சுற்றி பிணைக்கப்பட்டுள்ளது.வேற்றுக்கிரகவாசிகளால் அல்ல.
எனக்கு சொத்தும் வேண்டாம் சீரும் வேண்டாம் தொழில் கல்வி கொடு என்று போராடி பெற்றுக்கொண்டோமானால் நம்மை யார்தான் அசைக்க முடியும்.
நாம் வருமானத்தோடு வாழ்ந்து அந்த வருமானத்தில் நம் பெற்றோர் சகோதரிகளுக்கு எதையாவது செய்வதில் கிடைக்கும் சுகம் எதிலும் கிடைக்காது .அதே போல அவர்களுக்கு உதவி தேவைப்படும் நேரத்தில்
வலுவிழந்தவர்களாக வேடிக்கை பார்ப்பது மரண வலி என்பதையும் மறுக்க முடியாது.
ஆகவே தடைகள் உடைத்தால்தான் நாம் தலைதூக்க முடியும் என ஆண்களையும் ,மாமியார்களையும் ,சமூகத்தையும் சாடுவதை விடுத்து தடைகளை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் நான் அருகில் இன்னொரு பாதையை
உருவாக்குகிறேன் என மீறிச்செல்லுங்கள்.
ஆண்களால் பெண்கள் அடையும் சிரமங்களையும் சமத்துவமின்மையையும் சொல்லி சொல்லி மாளுவதை எங்கள் பெண் பிள்ளைகளும் பழகிவிடக்கூடாது.ஒட்டு மொத்த சமூகத்தையும் திருத்தினால்தான் என் வாழ்வு உய்யும் என்பதற்கில்லை.
குறைகள் விளம்புவதை விட்டு தனிப்பட்ட உயர்வை விரும்புவோம் .அதையே அடுத்த தலைமுறைக்கும் விட்டுச்செல்வோம். வேண்டும் வேண்டும் எனும் மன்றாட்டங்கள் வேண்டாம் .பறித்தே எடுப்போம்
.
Comments
suranjini
ஹாய்
'''குறைகள் விளம்புவதை விட்டு தனிப்பட்ட உயர்வை விரும்புவோம். அதையே அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்வோம்,'' உண்மையான வார்த்தைகள் சகோதரி.பாராட்டுக்கள்,
கடல் அளவு ஆசை
கையளவு மனசு
surey ka
Superb ka, Ellarukum Thevaiyana pathivu, Arumai.
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
good message for women.
hi acca, your message totally right.motivate all of us.thank you so much.
Naanlam vaazhkaila Kashtatha
Naanlam vaazhkaila Kashtatha anupavippatharkey Poranthu eruken pola.. Manasa Thaireyama vachikanum nu nenachalum ..athu konjam nerathuku thaan.. apram again sad feel.