தேதி: December 26, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பச்சரிசி - ஒரு படி
தேங்காய் - ஒன்று
சர்க்கரை - 2 கப்
ஏலக்காய் - 4
எண்ணெய் - தேவைக்கேற்ப
பச்சரிசியில் தண்ணீர் ஊற்றி முதல் நாளே ஊற வைத்துவிடவும்.

மறுநாள் எடுத்து தண்ணீரை வடிக்கட்டிவிட்டு, அரிசியை சிறிது நேரம் உலர்த்தி மிஷினில் கொடுத்து இடித்து விட்டு சலித்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சலித்த மாவைப் போட்டு, அதனுடன் தேங்காய்த் துருவல், சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்க்கவும்.

அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து, உருட்டும் பதத்திற்கு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவைச் சீடை போல சிறியதாக உருட்டி வைத்துக் கொள்ளவும். (விரலில் எண்ணெய் தொட்டுக் கொண்டு உருட்டினால் மாவு கையில் ஒட்டாமல் இருக்கும்).

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயவைத்து, உருட்டி வைத்துள்ள உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

சுவையான உருண்டைப் பணியாரம் தயார்.
