தேதி: May 19, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பட்டாணி அல்லது கொண்டைக்கடலை - ஒரு கப்
பெருஞ்சீரகம் - சிறிது
பட்டை - சிறிது
கொத்தமல்லித் தழை - சிறிது
கடுகு - தாளிக்க
உளுத்தம் பருப்பு - தாளிக்க
பச்சைமிளகாய் - 3
இஞ்சி - சிறு துண்டு
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய்ப்பூ - சிறிது
முதல் நாளே பட்டாணியை ஊற வைத்து, மறுநாள் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய் வற்றல், பெருஞ்சீரகம், கிராம்பு, பட்டை, கொத்தமல்லித் தழை போட்டு வறுக்கவும்.

வறுத்தவற்றை மிக்ஸியில் போட்டு தேங்காய் துருவல் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

அதனுடன் வேக வைத்த பட்டாணி மற்றும் அரைத்து வைத்த விழுது, சேர்த்து கிளறி விடவும்.

இறக்கும் பொழுது மல்லித் தழை மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.

சுவையான மசாலா சுண்டல் தயார்.
